அஇஅதிமுக கழக தகவல் தொழில் நுட்ப பிரிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!!

Image may contain: 9 people, people sitting and indoor

தீர்மானம் 1
“அஇஅதிமுக கழகம் தான் உண்மையான மக்கள் இயக்கம்மக்களுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட இயக்கம்மக்களுக்காகவே தன்னை அர்பணித்த தலைவியைக் கொண்டஒரு இயக்கம்”  என தவவாழ்வு வாழ்ந்த தங்கத்தாரகை, இந்தியாவின் இரும்புமங்கை, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து, ஒரு அரசியல் இயக்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்ற அணியை தமிழகத்தில் முதன் முதலாக உருவாக்கினார்கள்.“எங்கும் கணினி எதிலும் கணினி”யாக மாறிவிட்ட இந்த தொழில்நுட்ப யுகத்தில் ட்விட்டர், முகநூல், வாட்ஸ் ஆப், டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் சமூக ஊடக பயனர்களிடம் அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதிலும், கழகத்தின் கொள்கைகளின் விளைவை அதிகரிப்பதிலும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு முக்கிய பங்கை கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கடந்த  நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில், கழக அரசின் சாதனைகளை தமிழகம் முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்த்தது.இவ்வாறு கழகப்பணிகளை சிறப்பாக செய்து கழக அரசின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வரும் கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவினை கழக சட்ட விதியின் கீழ் அதிகாரப்பூர்வமாக கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்த கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது!

தீர்மானம் 2
“என் மக்கள் எதற்காகவும்,எப்போதும், யாரிடமும் கையேந்தி நிற்காதகாலத்தை உருவாக்குவதேஎன் வாழ்நாள் லட்சியம்” – என்று சூளுரைத்த வெற்றித்திருமகள்!
 தமிழர் தம் வாழ்வு செழிக்க தம் வாழ்வையே அர்ப்பணித்து,
வாடும் ஏழைகளுக்கு வீடுதோறும் விலையில்லா அரிசி தந்தும்,ஏழைத் தொழிலாளிக்கு என்.எல்.சி உரிமையைக் காத்துத் தந்தும்,கழனிவாழ் உழவர்க்கு காவேரி, முல்லைப்  பெரியாறை மீட்டுத் தந்தும்,ஆடு-மாடுகளை விலையில்லாது அள்ளித் தந்தும்,வேளாண்மை காத்திட்ட வீரமங்கை!
“மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தவ வாழ்வு வாழ்ந்த மாதரசி, நமது கழகத்தின் காவல் தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை (24.02.2020) முன்னிட்டு தமிழகம் முழுவதும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பாக மாணவச்செல்வங்களுக்கு பேச்சுப்போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்துதல், கல்வி சார்ந்த உபகரணப்பொருட்களை வழங்குதல், இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துதல், நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஏழைகளுக்கு  அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்த கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் தீர்மானிக்கப்படுகிறது!

தீர்மானம் 3
பெண்குழந்தைகளை பெற்றவளே மறந்து கைவிட்டாலும் உச்சி முகர்ந்து, வளர்த்து ஆளாக்கியவர்” நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
“தாய்க்குத் தான் ஒரு பிள்ளையின் அருமை புரியும்”; அதைப்போலத் தன் குழந்தைகளுக்கு தொட்டில் குழந்தைகள் திட்டம், அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களைத் தீட்டி, “ஆண் பிறந்தால் வாழும், பெண் பிறந்தால் சாகும்” என்ற அவலநிலையை மாற்றிய தீர்க்கத்தரசி நமது அம்மா அவர்கள்!
“பத்துகோடி தமிழினமும் பாசத்தோடு அம்மா” என அழைத்த, தங்கமங்கை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதியை,  “மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக” அறிவித்து, மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளை நாடு போற்றும் வகையிலும்,
பெற்றோர் இல்லாத ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிறைவடையும் பொழுது அவர்தம் வங்கிக்கணக்கில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தொகையினை வழங்க, சட்டப்பேரவை விதி எண் 110 – ன் கீழ் அறிவித்த, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது இதயங்கனிந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது!
தீர்மானம் 4
“எங்களுடைய திட்டங்கள் எங்களுடைய செயல்பாடுகள் எல்லாமே மக்களுக்காகத் தான்” என வீரமுழக்கம் இட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது ஆளுமையாலும், யாரும் எண்ணிடாத மக்கள் நலத்திட்டங்களாலும் தமிழகத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கினார்கள்.
அவர்களது வழியில் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு மேற்கொண்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களால் கழகத்தின் வெற்றி மகுடத்திற்கு கிடைத்த புதிய மைல்கல் தான் “நல்லாளுமை திறனுக்கான தரவரிசையில் தமிழகம் முதலிடம்” என்னும் சிறப்பு அந்தஸ்து.
மத்திய நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள நிர்வாகத் திறன் குறியீட்டுப் பட்டியலில், ஒட்டுமொத்தப் பிரிவில் தமிழகம் முதலிடம், நீதித்துறை மற்றும் பொதுப் பாதுகாப்பில் முதலிடம், பொது சுகாதாரத்துறையில் இரண்டாமிடம், சுற்றுச்சூழல் பிரிவில் மூன்றாமிடம், மனிதவள மேம்பாட்டில் ஐந்தாம் இடம் என பிற மாநிலங்களைக் காட்டிலும் முன்னோடி தரவரிசைகளை தமிழகம் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதுபோன்ற சரித்திர சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி இது  மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மையான மக்களாட்சியின் தொடர்ச்சி என்பதனை  மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும்  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தகவல் தொழில்நுட்பப்பிரிவு தனது பாராட்டுகளையும், நன்றிகளையும் மனதார தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 5
கழனியும், கணினியும் ஒருசேரத் தழைத்திட,மண்ணுக்கு நீரும், மாணவர்க்கு மடிக்கணினியும் தந்தமாதரசி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களது    
வழியில் விவசாயத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கயவர்களின் திமுக – காங்கிரஸ் கொடிய அரசால் அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் அழிவுத்திட்டத்தை அழித்து, விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான “காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக” அறிவித்து, ஏரோட்டும் உழவனின் கண்ணில் நீரோட்டம் தடுத்த தலைமகனாக, உழவன் சிரித்தால் உலகம் சிரிக்கும் என்பதை நிலைநாட்டிய, விவசாயிகளின் தோழர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், இத்தகைய சரித்திர திட்டத்தை நிறைவேற்ற பக்கபலமாய் விளங்கும் தங்கத்தமிழ்மகன் மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது நன்றிகளை காணிக்கையாக்கி பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறது.
தீர்மானம் 6
“எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்பதை உறுதியுடன் உரைத்திட்ட தங்கத்தாரகை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவாய் மொழியினை மெய்ப்பிக்கும் வகையில், இன்று அழிந்து விடும், நாளை அழிந்து விடும் என வாய்ச்சவடால் விடுபவர்களையும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு பல சாதனைகளை நிகழ்த்தி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருளாசியோடு தொடர்ந்து நான்காவது ஆண்டாக எழுச்சியோடு வீறுநடை போடுகின்ற விவசாயிகளின் விடிவெள்ளி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான நல்லாட்சிக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! என கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நெஞ்சார்ந்த நன்றியோடு பாராட்டுகிறது!
இந்த மூன்று ஆண்டுகளில் சரித்திர சாதனைகளைப் படைக்க  உறுதுணையாக இருந்த ஜல்லிக்கட்டு நாயகன்  மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி மலர்களை கழக தகவல் தொழில்நுட்பப்பிரிவு சமர்ப்பிக்கிறது.
தீர்மானம் 7
 “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதில் இம்மியளவும் மாறாமல்  தொடர்ந்து தமிழர் வாழ்வு செழிக்க, தொலைநோக்கு பார்வையோடு வளர்ச்சித்திட்டங்களை வகுத்துவரும் கழக அரசின், நாடுபோற்றும் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் உடனுக்குடன் சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துச்சென்று கழக அரசின் ஓட்டுவங்கியை அதிகரிக்கும் ஒற்றை இலக்கோடு கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.வரும் உள்ளாட்சித்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தற்போது முதலே தொடங்கியிருக்கும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, புதிய தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு, வாக்காளர்களை வகைப்படுத்தி, மாவட்ட வாரியாக வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக், டிவிட்டர், YouTube, Instagram, Share chat, Helo, Telegram, linkedIn உள்ளிட்ட பல சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம்   நமது கழக அரசின் சாதனைகள் மற்றும் தரவரிசைப்பட்டியல்களை அடித்தட்டு சாமானிய மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில் பணியாற்ற முடிவு செய்துள்ளது.தமிழர் தம் வாழ்வு செழிக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த கழக இரு பெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொடுத்துச் சென்ற கழகத்தை கண் துஞ்சாமல் பாதுகாத்து வருகிற இரட்டைக்குழல் துப்பாக்கியாம் கழக ஒருங்கிணப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்   திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் வழியில்,“எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என மாண்புமிகு அம்மா அவர்கள் சூளுரைத்த வார்த்தைகளை நெஞ்சில் விதைத்து, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அல்லும் பகலும் அயராது பாடுபடும் என சபதமேற்கிறது!

நன்றி
Singai G Ramachandran | Singanallur Constituency |  Singanallur MLA Constituency | AIADMK ITWing State Secratry | Singanallur

Published by singaigramachandran

Singai G Ramachandran is a IT wing State Secretary of AIADMK.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Design a site like this with WordPress.com
Get started